Dhagamullavan Lyrics

Writer :

Singer :




தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுவேன் என்றீர்
வறண்ட நிலத்தில் ஆறுகளை ஊற்றுவேன் என்றீர் (ஏசா : 44:3)
ஊற்றும் ஐயா உம் வல்லமையை
தாகத்தோடு காத்திருக்கிறேன்

1.மாம்சமான யாவர் மேலும் ஊற்ற வேண்டுமே
மக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே (யோவே : 2 : 28)

2.முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமே
கனவுகள் காட்சிகள் காண வேண்டுமே (யோவே 2 : 28)

3.நீரோடை அருகிலுள்ள மரங்களைப் போல‌
நித்தமும் தவறாமல் கனி தர வேண்டும்

4.புதிய கூர்மையான கருவியாகணும் (ஏசா 41 : 15)
பூமியெங்கும் சுவை தரும் உப்பாகணும் (மத் 5 : 13)

5.கல்லான இதயத்தை எடுத்திட வேண்டும்
சதையான இதயத்தைப் பொருத்திட வேண்டும்

6.வனாந்தரம் செழிப்பான தோட்டமாகணும்
வயல்வெளி அடர்ந்த காடாகணும் (ஏசா 32 : 15)

7.நீதியும் நேர்மையும் தழைக்க வேண்டுமே
நல்வாழ்வும் நம்பிக்கையும் வளர வேண்டுமே

8.தூய நீரை எங்கள் மேல் தெளித்திட வேண்டும்
எல்லாவித அசுத்தங்கள் நீங்கிட வேண்டும் (எசே 36 : 25)

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.