Kanmoodum Velayilum Lyrics

Writer :

Singer :




கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே
கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே
மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழை போல்
சொல்லாமல் கொள்ளாமல் வந்ததுஏன் சிலையே
மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழை போல்
சொல்லாமல் கொள்ளாமல் வந்ததுஏன் சிலையே
கண்மூடும்….. கண்மூடும் வேளையிலும் கலை கண்டு மகிழும்
கண்ணாளன் கற்பனையின் விலை இந்த உலகே

ஓ….ஓ…
ஆ…..ஆ….ஆ….
தெம்மாங்கின் எழிலோடு பொலிகின்ற அழகை
சிந்தாமல் சிதறாமல் கண் கொள்ள வந்தேன்
சின்ன சின்ன சிட்டு போல வண்ணம் மின்னும் மேனி
கண்டு கண்டு நின்று நின்று கொண்ட இன்பம் கோடி
கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே
கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே

ஓ..ஓ…..
ஆ….ஆ….ஆ….ஆ…
பண்பாடும் நெறியோடு வளர்கின்ற உறவில்
அன்பாவும் துணையாவும் பொன்வண்ணம் தோன்றும்
எண்ணி எண்ணி பார்க்கும்போதும் இன்ப ராகம் பாடும்
கொஞ்ச நேரம் பிரிந்தபோதும் எங்கே என்று தேடும்
கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே
கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே
ஓ…ஓ…ஓ…
ஆ…ஆ…ஆ…

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.